
கி.பி, கி.மு வில் நடந்த நிஜங்களை காதல் சோகங்களை கவிதைகளாய் கண் முன்னே நிறுத்தி இருக்கிறார் கவிஞர் பா.விஜய்.
சரித்திர கால காதல் நிகழ்வுகளை, மறைக்கப்பட்ட, மறக்கப்பட்ட காதல்களை
கவிதைகளாய் தொகுத்து நெய்யப்பட்டது இந்த உடைந்த நிலாக்கள்.
கவிஞர் சுரதா :உலகம் எங்கும் யுத்தம். ஒரு நாள் ஏவுகணைகளை ஏவிக் கொண்டு நிலவையும் இவர்கள் உடைத்துவிடக் கூடும். அப்போது 'உடைந்த நிலாக்கள்' உலவும். ஆனால்,இந்த 'உடைந்த நிலா'க்களோ காதலால் 'உடைந்த நிலாக்கள்'!
கவிஞர் போட்டிருக்கும் காதல் கணக்குகள் அற்புதமானவை.
பூ+தீ= வாலிபம்
வாலிபம்+பூ=காதல்
வாலிபம்+தீ=காமம்
ஆசை X கவிதை = பருவம்
பருவம் X கவிதை = காதல்
பருவம் X ஆசை = காமம்
இளமை என்ற சொல்லை
அர்த்தப்படுத்தும் சொல் 'காதல்'
காதல் என்ற சொல்லை
அர்த்தப்படுத்தும் சொல் 'காமம்'
ஆண் என்றால் என்ன என்று ஆணுக்கும்
பெண் என்றால் என்ன என்று பெண்ணுக்கும்
புரிய வைப்பது 'காதல்'
***** ஒரு கவிதை காவியம் *****
2 comments:
its very nice book... i read..
Now its come with Part2.
Post a Comment