Thursday

உடைந்த நிலாக்கள்


கி.பி, கி.மு வில் நடந்த நிஜங்களை காதல் சோகங்களை கவிதைகளாய் கண் முன்னே நிறுத்தி இருக்கிறார் கவிஞர் பா.விஜய்.

சரித்திர கால காதல் நிகழ்வுகளை, மறைக்கப்பட்ட, மறக்கப்பட்ட காதல்களை
கவிதைகளாய் தொகுத்து நெய்யப்பட்டது இந்த உடைந்த நிலாக்கள்.

கவிஞர் சுரதா :உலகம் எங்கும் யுத்தம். ஒரு நாள் ஏவுகணைகளை ஏவிக் கொண்டு நிலவையும் இவர்கள் உடைத்துவிடக் கூடும். அப்போது 'உடைந்த நிலாக்கள்' உலவும். ஆனால்,இந்த 'உடைந்த நிலா'க்களோ காதலால் 'உடைந்த நிலாக்கள்'!

கவிஞர் போட்டிருக்கும் காதல் கணக்குகள் அற்புதமானவை.

பூ+தீ= வாலிபம்
வாலிபம்+பூ=காதல்
வாலிபம்+தீ=காமம்

ஆசை X கவிதை = பருவம்
பருவம் X கவிதை = காதல்
பருவம் X ஆசை = காமம்

இளமை என்ற சொல்லை
அர்த்தப்படுத்தும் சொல் 'காதல்'
காதல் என்ற சொல்லை
அர்த்தப்படுத்தும் சொல் 'காமம்'

ஆண் என்றால் என்ன என்று ஆணுக்கும்
பெண் என்றால் என்ன என்று பெண்ணுக்கும்
புரிய வைப்பது 'காதல்'

***** ஒரு கவிதை காவியம் *****





2 comments:

Anonymous said...

its very nice book... i read..

N A V ! N said...

Now its come with Part2.