Monday

தெய்வீக ராகம் - ஜென்சி

எத்தனையோ முறை கேட்டிருந்த போதிலும் ஏனோ அந்த பாடல் அந்த தருணத்தில் மனதில் ஒரு பிரமிப்பை உண்டாக்கியது. தெய்வீக ராகம்.. தெவிட்டாத பாடல்.. (உல்லாசப் பறவைகள்)இந்த பாடல். ஏதோ ஒரு ரேடியோவில் கேட்டேன். ஜென்சியின் குரலில் ஏதோ ஒரு மயக்கம் இந்த பாடலில். சரியென்று ஜென்சியின் பாடல்களை சேகரிக்க ஆரம்பித்தேன். ஒவ்வொரு பாடல்களுமே மீண்டும் மீண்டும் முனுமுனுக்க வைக்கின்ற பாடல்கள். இளையராஜாவின் இசையில் மனதை வருடி சென்றன.
மலைச்சாரலில் நடக்கும்போது சில்லிட வைக்கும் பனிகாற்றை போல இருந்ததுஜென்சியின் குரல்.

ஜென்சியின் பாடல்கள் அனைத்தும் தெய்வீக ராகம்; தெவிட்டாத பாடல்..

மயிலே..மயிலே.. (கடவுள் அமைத்த மேடை )
மீன்கொடித் தேரில்..(கரும்புவில்)
என் வானிலே.. ஒரே வெண்ணிலா...(ஜானி)
ஒரு இனிய மனது... (ஜானி)
ஆயிரம் மலர்களே.. மலருங்கள்.. (நிறம் மாறாத பூக்கள்).
இரு பறவைகள் மலை முழுவதும்.. , (நிறம் மாறாத பூக்கள்).
தம்தன..தம்தன.. தாளம் வரும்.. (புதிய வார்ப்புகள்)
இதயம்... போகுதே.., (புதிய வார்ப்புகள்)
காதல் ஓவியம்... (அலைகள் ஓய்வதில்லை)
தெய்வீக ராகம்.. தெவிட்டாத பாடல்.. (உல்லாசப் பறவைகள்)
அடிப் பெண்ணே.. பொன்னூஞ்சல் ஆடும் இளமை..(முள்ளும் மலரும்)
கல்யாணம் என்னை முடிக்க.. (மெட்டி)
தீர்த்தக் கரைதனிலே (தைப்பொங்கல்)
வாடா என் ராஜாக்கண்ணா.. (ரிஷிமூலம்)
ஆத்தோர காத்தாட.. (எங்கேயோ கேட்ட குரல்)
உனக்கென தானே... (பொண்ணு ஊருக்குப் புதுசு)
கீதா..சங்கீதா... (அன்பே சங்கீதா)
தேவன் திருச்சபை மலர்களே (அவர் எனக்கே சொந்தம்)
பனியும் நீயே..மலரும் நானே.. (பனிமலர்) - Shankar ganesh
பூ மலர்ந்திட.. (டிக் டிக் டிக்)
வாடி என் கப்பக் கிழங்கே (அலைகள் ஓய்வதில்லை)
ஆடச் சொன்னாரே (வட்டத்துக்குள் சதுரம்)
வானத்துப்பூங்கிளி.. (திரிபுர சுந்தரி)
தோட்டம் கொண்ட ராசவே (பகலில் ஓர் இரவு)
அக்கா..ஒரு ராஜாத்தி (முகத்தில் முகம் பார்க்கலாம்)
நான் உன்னைத் திரும்ப திரும்ப.. (எல்லாம் உன் கைராசி)
காத்தாடுது ஆசை கூத்தாடுது (கரடி) -கங்கை அமரன்
என் கானம் இன்று அரங்கேறும் (ஈர விழிக் கனவுகள்)
மணியோசைக் கேட்டதா.. (இருளும் ஒளியும்)
காலை பனியில் (காயத்ரி)
அலங்கார பொன் ஊஞ்சலே - (சொன்னது நீ தானா)


Thursday

உடைந்த நிலாக்கள்


கி.பி, கி.மு வில் நடந்த நிஜங்களை காதல் சோகங்களை கவிதைகளாய் கண் முன்னே நிறுத்தி இருக்கிறார் கவிஞர் பா.விஜய்.

சரித்திர கால காதல் நிகழ்வுகளை, மறைக்கப்பட்ட, மறக்கப்பட்ட காதல்களை
கவிதைகளாய் தொகுத்து நெய்யப்பட்டது இந்த உடைந்த நிலாக்கள்.

கவிஞர் சுரதா :உலகம் எங்கும் யுத்தம். ஒரு நாள் ஏவுகணைகளை ஏவிக் கொண்டு நிலவையும் இவர்கள் உடைத்துவிடக் கூடும். அப்போது 'உடைந்த நிலாக்கள்' உலவும். ஆனால்,இந்த 'உடைந்த நிலா'க்களோ காதலால் 'உடைந்த நிலாக்கள்'!

கவிஞர் போட்டிருக்கும் காதல் கணக்குகள் அற்புதமானவை.

பூ+தீ= வாலிபம்
வாலிபம்+பூ=காதல்
வாலிபம்+தீ=காமம்

ஆசை X கவிதை = பருவம்
பருவம் X கவிதை = காதல்
பருவம் X ஆசை = காமம்

இளமை என்ற சொல்லை
அர்த்தப்படுத்தும் சொல் 'காதல்'
காதல் என்ற சொல்லை
அர்த்தப்படுத்தும் சொல் 'காமம்'

ஆண் என்றால் என்ன என்று ஆணுக்கும்
பெண் என்றால் என்ன என்று பெண்ணுக்கும்
புரிய வைப்பது 'காதல்'

***** ஒரு கவிதை காவியம் *****





Wednesday

பட்டாம்பூச்சி


பட்டாம்பூச்சி (ஆங்கிலத்தில் Papillon, மூலம் : French )

Henri Charriere ன்னும் Frenchகார‌ரின் சுயசரிதை.செய்யாத‌ ஒரு கொலைக்காக‌ குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் முழுவதும் தீவாந்தரச் சிறையில் கழிக்க த‌ண்ட‌னை விதிக்க‌ப்ப‌ட்டு, French க‌ய‌னாவிற்க்கு (S.America) நாடுக‌ட‌த்த‌ப்ப‌ட்டு சிறைவைக்க‌ப்பட்டான் (1930க‌ளில்) .13ஆண்டு காலத்துக்கு சிறை சிறையாக அவன் தப்பி ஓடிக்கொண்டே இருந்தான்.ஓட்டைப் படகுகளிலும், கட்டுமரங்களிலும், புதை மணல்களிலும், இருண்ட அடவிகளிலும், சிவப்பு இந்தியர்களிடமும், தன்னைவிட முரடர்களான கைதிகளிடமும் வாழ்கையை வைத்து போராடினான்.

ஒரு சிறு ப‌ட‌கில் 1000 மைல்க‌ள் க‌ட‌லை க‌ட‌ந்து டிரினிடாடை ஒரு முறை அடைந்து சுமார் 6 மாத‌கால‌ம் செவ்விந்திய‌ர்க‌ளுடன் வ‌சித்தான் ; அங்கு ம‌ன‌ம் புரிந்தான். மீன்டும் France செல்ல‌ முய‌ல்கையில் பிடிப‌ட்டு 4 ஆண்டு த‌னிமைச் சிறை த‌ண்ட‌னை. த‌னிமை சிறை இருப்ப‌திலேயே கொடுமையான‌து. நிச‌ப்த‌ம் ம‌ட்டுமே. ப‌ல‌ருக்கும் பைத்திய‌ம் பிடிக்கும். அதையும் வெல்கிறான்.

மீண்டும் மீன்டும் த‌ப்ப‌ முய‌ற்ச்சி. ப‌ல‌ ந‌ண்ப‌ர்க‌ள், எதிரிக‌ள், துரோக‌ங்க‌ள், ந‌ம்பிக்கைக‌ள். ம‌ர‌ண‌ங்க‌ள், சிறை க‌ல‌க‌ங்க‌ள்...

க‌டைசியாக‌ டெவில்ஸ் தீவில் சிறை. கொப்ப‌ரை தேங்க‌யா நிர‌ம்பிய‌ சாக்கு மூட்டை மீது சவாரி செய்து கடலை கடந்து, வெனிசுலாவை அடைந்து இறுதியில் வெற்றி பெறுகிறான்.

சிறை களகங்கள், தனிமை சிறையின் கொடுமைகள், அலுமினிய குழாய்களில் பணத்தை வைத்து உடம்பில் மறைத்து வைப்பது, கடலில் மூழ்கி முத்து எடுப்பது, கடலின் நிலையை அறிந்து படகை செலுத்துவது நினைத்து பார்க்க முடியாத பிரமிக்க வைக்ககூடிய நிகழ்வுகள் அடங்கிய ஒரு மனிதனின் சுயசரிதை.சுமார் 850 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை படிக்க கொஞ்சம் பொறுமை வேண்டும்.