Sunday

As Far As My Feet will Carry Me


இரண்டாம் உலகப்போரின்போது சைபீரியாவின் சுரங்கத்தில் ஜெர்மானிய வீரர்கள் கொத்தடிமைகளாக ஆக்கப்படுகிறார்கள். 3 ஆண்டுகளுக்கு பிறகு சுரங்கத்தில் உள்ள மருத்துவரின் உதவியால் அங்கிறுந்து தப்பிக்கிறான் படத்தின் கதாநாயகன். அது பனிக்காலம். எங்கும் பனி.சைபீரியாவை நடந்தே

கடக்கிறான். பனிப்புயல், சூறாவளி என்று இயற்கையின் சீற்றங்களில் தனி மனிதனாக ஒவ்வொரு அடியாக நடந்து செல்கிறான். வழியில் இரு ரஷ்ய வேட்டயர்களை சந்திக்கின்றான். அவர்களின் உதவியுடன் காட்டாற்றை கடந்து செல்கிறான். மீண்டும் பனி மலைகளின் நடுவே பயணம். ஓநாய்களின் பிடியில் சிக்கிய அவனை அங்கு வாழும் ஒரு சிறு பழங்குடி மக்கள் காப்பாற்றுகிறார்கள். பிறகு அங்கிருத்து பயணபடுகிறான். சில ரயில் பயணம். பெரும்பாலும் கால்நடையாக மட்டுமே. இப்படியே நடந்து பெர்சியாவை அடைகிறான். ( இங்கு தாஜ்மஹாலின் பிம்பம் போலவே முழுமை பெறாத கட்டிடம் ஒன்று உள்ளது). அங்கு ஒரு போலந்து நாட்டுகாரனின் உதவியுடன் ரஷ்யாவின் எல்லையை கடக்க போலி பாஸ்போர்ட் எடுத்து கொண்டு பயணிக்கிறான். இதற்கு நடுவே இவனை தேடிபிடித்தே தீரவேண்டும் என்ற வெறியோடு அந்த சுரங்கத்தின் கமான்டர் அவனை தேடிகொண்டிருக்கிறான். அவர்களிடம் இருந்து எப்படியோ தப்பித்து. ரஷ்யாவின் எல்லையை கடந்து டெஹ்ரானின் எல்லையை அடைகிறான்.

அங்கு அவன் ரஷ்ய உளவாளி என்ற சந்தேகத்தில் சிறைபடுகிறான். பிறகு 2 வருடங்கள் கடந்து ஜெர்மானிய அரசு அதிகாரியின் உதவியால் ரஷ்ய உளவாளி இல்லை என்று அறிந்து டெஹ்ரானில் இருந்து பெர்லின் சென்று தனது மனைவி, குழந்தைகளோடு சேர்கிறான்.

1942 வருடம் தன் குடும்பத்தை விட்டு பிரிந்து செல்கிறான். சுரங்கத்தில் இருந்து 1949 வருடம் தப்பித்து 1952 வருடம் மீண்டும் தனது குடும்பத்தை அடைகிறான்.



No comments: