பழமொழியை பிழைமொழி என்று சொல்லிப் புறங்கையால் ஒதுக்கிவிடமுடியாது.தமிழ் இலக்கியத்தில் பழமொழியானது , முதுசொல், முதுமொழி,பழஞ்சொல்,மூதுரைஎன்று பலவாறாக குறிக்கப்படுகிறது. தொல்காப்பியத்தில் பழமொழிக்கான விளக்கம்அளிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் பழமொழியைச் சொலவடை என்றும் , பழைய ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒவகதை என்றும் சேலத்தில் சொலவந்தரம் என்றும் கோவையில்ஒப்புத் தட்டம் என்றும் அழைக்கிறார்கள்.ஆங்கிலத்தில் பழமொழியானது Proverb என்றும் old sayings என்றும் அழைக்கப்படுகிறது. பெரும்பாலான தமிழ்ப் பழமொழிகள் எதுகை மோனையிலும் , முரண்தொடையிலும் எழுதப்பட்டுள்ளன.
சில பழமொழிகள்.
- அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
- அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.
- அற்பனுக்குப் பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்.
- அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்.
- அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.
- அற்பனுக்குப் பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்.
- அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்.
- அஷ்டமத்துச் சனி அழுதாலும் விடாது.
- அவசரம் என்றால் அண்டாவிலும் கைநுழையாது.
- அறுப்புக்காலத்தில் எலிக்கு ஏழு கூத்தியாள்.
- அக்காள் ஆனாலும் சக்களத்தி சக்களத்தி தான்
- அகழியில் விழுந்த முதலைக்கு அதுவே வைகுந்தம்.
- அகழியில் விழுந்த முதலைக்கு அதுவே வைகுந்தம்.
- அடித்து வளர்க்காத பிள்ளையும் முறுக்கி வளர்க்காத மீசையும் வாய்க்கு முன் ஏய்க்கும்.
- அஞ்சும் சரியாக இருந்தால் அறியாப் பெண்ணும் கறி சமைப்பாள்.
- அவிசாரி ஆனாலும் முகராசி வேணும் , அங்காடி போனாலும் கைராசி வேணும்.
- அவசரமாக கல்யாணம் செய்து கொண்டால் மெதுவாக உட்கார்ந்து கொண்டுதான் அழுவாய்.
- அழகுக்காகத் திருமணம் செய்து கொள்பவன் இரவு நேரங்களில் இன்பமாகவும்பகல்நேரங்களில் துக்கமாகவும் இருப்பான்.
- அதிர்ந்து வராத புருஷனும் , மிதந்து வராத அரிசியும் பிரயோசனமில்லாதவை.
- அதிகாரி குசுவிட்டால் அமிர்த வஸ்து தலையாரி குசுவிட்டால் தலையை வெட்டு.
- ஆடிக்காற்றில் அம்மியும் குழவியும் ஆலாய்ப் பறக்கும் போதுஇலவப்பஞ்சு ஏன் என்று சேதி கேட்டதாம்.
- ஆட்டுக்கு வால் அளந்து வைத்திருக்கு
- ஆடத்தெரியாதவன் அரங்கு கோணல் என்றானாம்.
- ஆட்டுக்கு வால் அளந்து வைத்திருக்கு
- ஆடத்தெரியாதவன் அரங்கு கோணல் என்றானாம்.
- ஆண் தாட்சண்யப்பட்டால் கடன் , பெண் தாட்சண்யப்பட்டால் விபச்சாரம்.
- ஆடத்தெரியாத தேவடியாளுக்கு கூடம் போறாதாம்
- ஆற்றுல போட்டாலும் அளந்து போடு
- ஆழமறியாமல் காலை விடாதே.
- ஆயிரம் வேரைக் கண்டவன் அரை வைத்தியன் (மருவி ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்று வழங்குகின்றது) .
- ஆடத்தெரியாத தேவடியாளுக்கு கூடம் போறாதாம்
- ஆற்றுல போட்டாலும் அளந்து போடு
- ஆழமறியாமல் காலை விடாதே.
- ஆயிரம் வேரைக் கண்டவன் அரை வைத்தியன் (மருவி ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்று வழங்குகின்றது) .
- ஆக்கங்கெட்ட அக்கா மஞ்சள் அரைத்தாலும் கரிகரியாக வரும்.
- ஆகாததும் வேகாததும் ஆண்டவனுக்கு அதிலும் கெட்டது குருக்களுக்கு.
- ஆண்கள் இதயங்களால் சிரிப்பார்கள்பெண்கள் உதடுகளால் சிரிப்பார்கள்.
- ஆண்கள் யாருமே இல்லையென்றால் பெண்கள் அனைவரும் கற்புக்கரசிகள் தான்.
- படப்போட திங்குற மாட்டுக்குப் புடுங்கிப் போட்டா காணுமா ?
- பெண்களுக்கு இரண்டுமுறை பைத்தியம் பிடிக்கும்அவள் காதல் கொண்ட சமயம்,தலை நரைக்கத் தொடங்கும் சமயம்.
- சல்லடையில் கூட தண்ணீரை எடுத்துச் செல்வான் புத்திசாலி.
- எழுத்துச் சிரங்கு ஒருவனுக்குப்பிடித்துவிட்டால் அவனை ஒன்றுமே செய்யமுடியாதுஅவன் பேனாவால் சொறிந்து கொண்டேயிருப்பான்.
- உரலில் தலையைவிட்டபிறகு உலக்கைக்கு அஞ்சக் கூடாது.
- சொந்த ஊரில் ஒருவன் பெயருக்கு மதிப்புஅயலூரில் அவன் சட்டைக்குத் தான் மதிப்பு.
- உனது ஒவ்வொரு தவறும் உன் எதிரியை உத்தமனாக்கிவிடும்.
- எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம்ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்.
- நம்பிக்கையுள்ளவர்களுக்கு கதவுகள் மூடிக்கொண்டாலும்ஜன்னல்கள் வழிகாட்டும்.
- ஒரு எலும்புக்காக நேர்மையான மனிதன் தன்னை நாயாக்கிக் கொள்ளமாட்டான்.
- காகம் உனக்கு வழிகாட்டினால் அது செத்த நாய்களிடம் உன்னைக் கொண்டு சேர்க்கும்.
- ஓநாய்கள் வாழும் இடத்தில் பறவைகள் பட்டினி கிடப்பதில்லை.
- ஒருவன் தன் கோடாரியை விழுங்கப்போவதாகச் சொன்னால் நீ அதன் காம்பைப்பிடித்துக்கொண்டு அவனுக்கு உதவி செய்.
- ஒரு பெண்ணையும் காதலிக்காதவன் பன்றியிடம் பால் குடித்திருப்பான்.
- குட்டையான பெண்ணை மணந்து கொண்டால் துணி அதிகம் தேவையிராது.
- ஒருத்திமீது காதல் வந்துவிட்டால் அவள் அம்மைத் தழும்புகளும்அதிர்ஷ்டக் குறிகளாகத் தெரியும்.
- தூக்கம் வந்துவிட்டால் தலையணை தேவையில்லை,காதல் வந்துவிட்டால் அழகு தேவையில்லை.
- மஞ்சள் துண்டைக் கண்ட சுண்டெலி மளிகைக்கடை வைத்ததாம் .
- நீ குடும்பத்தின் தலைவனாக இருக்கவேண்டுமானால் உன்னைமூடனாகவும் செவிடனாகவும் காட்டிக் கொள்ளவேண்டும்.
- மூன்று முறை முகத்தில் அடித்தால் புத்தருக்கும் கோபம் வரும்.
- ஜாருக்கு ஜலதோஷம் வந்தால் ரஷ்யா முழுவதும் தும்மும்.
- ஐந்து பெண்குழந்தைகள் உள்ள குடும்பத்திற்குத் திருடன் வேறு தேவையில்லை.
- மனைவியும் பாயும் வந்தபுதிதில் சிறப்பாக இருக்கும்.
- கடவுள் ஒருவனைத் தண்டிக்க விரும்பினால் அவனுக்குத் திருமணம்பற்றிய நினைப்பை உண்டாக்குவார்.
- பெண்பிள்ளை விவாகத்திற்கு முன்னாள் அழுவாள்ஆண்பிள்ளை விவாகத்திற்கு பின்னால் அழுவான்.
- காபியும் காதலும் சூடாக இருக்கும் வரை தான் ருசியாக இருக்கும்.
- கூரை ஏறிக் கோழி பிடிக்கமுடியாத குருக்கள்வானத்தைக் கீறி வைகுண்டத்தைக் காட்டுவாரா.
- உள்ளூரிலே ஓணான் பிடிக்காதவன்உடையார் பாளாயத்துல போயி உடும்பு பிடிப்பானா ?
- உலகத்திற்கே தெரியவேண்டிய விஷயத்தை உன் மனைவியிடம் மட்டும் சொல் ,அது போதும்.
- தூக்கில் தொங்குவதும் மனைவி வாய்ப்பதும் விதியின் பயன்.
- ஓய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம் உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும் .
- துப்பு கெட்டவளுக்கு இரட்டை பரிசாம்.
- இடுக்கண் வருங்கால் நகுக.
- இடிவிழுந்தபின் பஞ்சாங்கம் பார்த்துப் பயனென்ன ?
- உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.
- உலை வாயை மூடினாலும் ஊர்வாயை மூடேலாது.
- ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.
- கூறு கெட்ட மாடு ஏழு கட்டுப் புல் திங்குதாம்.
- உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.
- உலை வாயை மூடினாலும் ஊர்வாயை மூடேலாது.
- ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.
- கூறு கெட்ட மாடு ஏழு கட்டுப் புல் திங்குதாம்.
- சாமியே சைக்கிள்ள போக பூசாரி புல்லட் கேட்டானாம்.
- தைமாத மழை தவிட்டிற்குக் கூட காணாது.
- கோணல் சட்டியானாலும் கொழுக்கட்டை வெந்தால் சரி.
- தைமாத மழை தவிட்டிற்குக் கூட காணாது.
- கோணல் சட்டியானாலும் கொழுக்கட்டை வெந்தால் சரி.
No comments:
Post a Comment